
ஷார்ஜாவில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இதில் ஆர்சிபி ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன் வீசிய ஒவரில்தான் நரேன் 22 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆர்சிபி ரசிகர்கள் சிலர், டேனியல் கிறிஸ்டியனின் காதலி ஜோர்ஜியா டானுக்கு எதிராகப் பல அவதூறான கருத்துகளைத் தெரிவித்தனர். இது பெரும் சர்ச்சையானது. ஆர்சிபி வீரர் மேக்ஸ்வெலும் இதைக் கண்டித்து, “சமூக வலைதளத்தில் குப்பைகளைக் கொட்டாதீர்கள். நாங்களும் மனிதர்கள்தான். முடிந்த அளவு சிறப்பாக விளையாடினோம்” எனத் தெரிவித்தார்.
ஆர்சிபி அணி வீரர்களுக்கு ஆதரவாக கொல்கத்தா அணியும் கருத்துகளைத் தெரிவித்தது. அந்த அணி தனது ட்விட்டர் பதிவில், “வெறுப்புச் செய்திகளுக்குத் தடையிடுங்கள். கிரிக்கெட் வீரர்கள் அடிக்கடி இதுபோன்று ஆன்லைன் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இதற்குத் தகுந்த எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில் இருக்கிறோம்.