
IPL 2021: South African IPL Players To Return Home, Undergo Quarantine (Image Source: Google)
இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 09 ஆம் தேதி தொடங்கியது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்களின்றி நடத்தப்பட்ட இத்தொடரில், வீரர்கள் பயோ பபுள் முறையில் தொடரில் பங்கேற்றனர்.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்றிருக்கு வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வீரர்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு திரும்ப தயாராகி வருகின்றனர். ஆனால் இத்தொடரில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாடு திரும்புவதில் இன்னமும் சிக்கல் நிலவி வருகிறது.