Advertisement
Advertisement
Advertisement

இரண்டு புள்ளிகளைப் பெற்றது மகிழ்ச்சி - கேஏல் ராகுல் !

கொல்கத்தா அணியுடன் வெற்றிபெற்று 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

Advertisement
 IPL 2021: We Played Smartly, Says PBKS Captain KL Rahul After Win Over KKR
IPL 2021: We Played Smartly, Says PBKS Captain KL Rahul After Win Over KKR (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 02, 2021 • 11:31 AM

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 45ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை குவித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 02, 2021 • 11:31 AM

அதன்பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

Trending

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல், “இந்த போட்டியில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெற்றது மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியில் நாங்கள் எந்தவித முயற்சியும் எடுக்காமல் ப்ராப்பர் கிரிக்கெட்டை விளையாடினோம். எங்கள் அணியில் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு தெளிவான ரோல் வழங்கப்பட்டது.

எனவே இந்த போட்டியில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்து போட்டியை இறுதி வரை கொண்டு சென்று வெற்றியும் பெற்றுள்ளோம். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

எங்கள் அணி ஒரு சிறப்பான அணி என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் நாங்களே எங்கள் மீது அழுத்தத்தை போட்டுக் கொண்டதால் நிறைய போட்டிகளை தவற விட்டோம். நிச்சயம் இனி வரும் போட்டிகளில் நாங்கள் இறுதிவரை போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement