
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் கேகேஆரும் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பட்லரும் படிக்கல்லும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவரில் 97 ரன்களை குவித்தனர். படிக்கல் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் சஞ்சு சாம்சன், அதிரடியாக ஆடிய பட்லருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அடித்து ஆடினார். சாம்சன் 19 பந்தில் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடி சதமடித்த ஜோஸ் பட்லர் 61 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இது பட்லருக்கு இந்த சீசனில் 2வது சதம். இதற்கு முன் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராகவும் ஒரு சதம் அடித்தார் சாம்சன்.