
IPL 2022: Harshal Patel Wants to Play For CSK! (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இந்தாண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இதற்க்கான ஏற்பாடுகளை பிசிசிஐ தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைந்துள்ளதால், வீரர்கள் ஏலம் மெகா ஏலமாக வருகிற பிப்ரவரி 13, 14ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடி தொடரின் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த ஹர்ஷல் படேல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.