ஐபிஎல் மெகா ஏலம் 2022: ஷாருக் கானை தட்டித்தூக்கிய பஞ்சாப்!
தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஷாருக் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 9 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

IPL 2022: Punjab Kings acquires all-rounder Shahrukh Khan for Rs 9 cr (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதன்பிறகு, சர்வதேச ஆட்டங்களில் விளையாடாத இளம் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.
தொடக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே கடும் போட்டி நிலவியது. பின்னர், கொல்கத்தா போட்டியிலிருந்து விலகியதையடுத்து, பஞ்சாப் கிங்ஸ் சென்னையுடன் மோதியது. இரண்டு அணிகளும் மாற்றி மாற்றி ஏலம் எடுக்க விலை ரூ. 7 கோடியைத் தாண்டியது.
சென்னை அணி ரூ. 8.75 கோடி வரை தாக்குப்பிடித்தது. இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 9 கோடிக்கு ஷாருக் கானைத் தேர்வு செய்தது. ஷாருக் கான் இதுவரை 50 டி20 ஆட்டங்களில் விளையாடி 547 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 136.40.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News