Advertisement
Advertisement
Advertisement

மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி போட்டிக்கு வர கூடாது என்றே விரும்புகிறேன் - டுவன் பிராவோ!

மும்பை இந்தியன்ஸ் அணியை நாக் அவுட் போட்டிகளில் வீழ்த்துவது மிக மிக கடினம் என சிஎஸ்கேவின் பந்துவீச்சாளர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 24, 2023 • 15:11 PM
IPL 2023: 'Dhoni Can Keep Prolonging His Career Due To Impact Player Rule', Says Dwayne Bravo
IPL 2023: 'Dhoni Can Keep Prolonging His Career Due To Impact Player Rule', Says Dwayne Bravo (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபையர்-1 ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்களையும், டெவான் கான்வே 40 ரன்களையும் சேர்த்தனர்.  

அதன்பின் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் அணிக்கு ஷுப்மன் கில்லை தவிர அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் எடுத்து கொடுக்கவில்லை. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ரஷித் கானும் 30 ரன்களில் விக்கெட்டை இழந்ததால் 157  ரன்களுக்கு ஆல் அவுட்டான குஜராத் அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

Trending


இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான டூவைன் பிராவோ, இறுதி போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் வந்துவிட கூடாது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய டுவைன் பிராவோ, “மும்பை இந்தியன்ஸ் அணியை பார்த்து நான் பயப்படுவேன். மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே ஆபத்தான அணி, மற்ற அணிகளை இலகுவாக வீழ்த்தி விடலாம் என நான் கூறவில்லை, அனைத்து அணிகளும் ஆபத்தான அணி தான். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியை நாக் அவுட் போட்டிகளில் வீழ்த்துவது மிக மிக கடினம். 

உண்மையாகவே நான் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி போட்டிக்கு வர கூடாது என்றே விரும்புகிறேன். இது எனது தனிப்பட்ட விருப்பம். இது எனது நண்பரான பொலார்டிற்கும் தெரியும். நாங்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதால், மற்ற மூன்று அணிகளுக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இறுதி போட்டிக்கு எந்த அணி வந்தாலும் அவர்களை எதிர்கொள்ள எங்களை தயார்படுத்தி கொள்வோம்” என்று தெரிவித்தார்.

மேலும் தோனியின் எதிர்காலம் குறித்து பேசிய அவர், “வந்திருக்கும் புதிய இம்பேக்ட் பிளேயர் ரூல் அடிப்படையில், தோனி அடுத்த வருடமும் விளையாடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement