
மும்பை இந்தியன்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையிலும் மும்பை அணி களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது. 201 ரன்கள் இலக்கை சேஸ் செய்த மும்பை அணிக்கு ரோகித் சர்மா 56 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் கொடுத்தார். கேமரூன் கிரீன் 47 பந்துகளில் சதம் விளாசி போட்டியை அபாரமாக பினிஷ் செய்தார்.
இறுதிவரை ஆட்டம் இழக்காமல் கேமரூன் கிரீன்(100) மற்றும் சூரியகுமார் யாதவ்(25) இருவரும் களத்தில் நின்றனர். 201 ரன்கள் இலக்கை 18 ஓவர்களில் சேஸ் செய்து அபார வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. அத்துடன் 16 புள்ளிகள் பெற்று தற்காலிகமாக நான்காவது இடத்திலும் இருக்கிறது. மும்பைக்கு பிளே ஆப் வாய்ப்பு உறுதியாக வேண்டும் என்றால், அடுத்து நடைபெறும் குஜராத் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியை தழுவ வேண்டும்.
ஹைதராபாத் அணியை வீழ்த்திய பிறகு பேட்டியளித்த ரோகித் சர்மா கூறுகையில், “இன்று வெற்றிபெற வேண்டும் என்கிற மனநிலையில் மட்டுமே களமிறங்கினோம். மற்றது நடக்குமா? என்பது பற்றி நாங்கள் கவலைகொள்ளவில்லை. எங்களது கட்டுக்கோப்பில் என்ன இருக்கிறதோ அதை தான் எங்களால் கட்டுப்படுத்த முடியும். மற்ற விஷயங்கள் நடக்கும் என்று நம்பிக்கை மட்டுமே வைக்க முடியும்.