11-mdl.jpg)
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32ஆவது லீக் போட்டியானது நேற்று மதியம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது.
இப்போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பாக டூப்ளிசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர். பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவிக்க இறுதியில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், “இது போன்ற மைதானங்களில் விளையாடும் போது ஓவருக்கு 10, 12, 13 ரன்கள் என்பதெல்லாம் அடிக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் அதற்கு நாம் நல்ல முமென்ட்டத்தில் இருக்க வேண்டும். பொதுவாகவே ஹெட்மையர் இறுதி நேரத்தில் எங்களுக்காக மிகப்பெரிய ரன் சேசிங்கை முடித்து கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.