
இந்த தசாப்தத்தின் தலைசிறந்த வீரராக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 'ரன் மிஷினாக' செயல்பட்டு தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறார். சர்வதேச அளவில் 75 சதங்களை விளாசி, சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் ரெக்கார்டை வேகமாக நெருங்கி வருகிறார். இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஐபிஎல் தொடரிலும் விராட் கோலி தொடர்ந்து மிரட்டலாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார்.
2008ஆம் ஆண்டு முதலே, ஆர்சிபி அணிக்காக மட்டும் விளையாடி, அந்த அணிக்கு கேப்டனாகவும் இருந்திருக்கிறார். இருப்பினும், இவரால் ஒருமுறைகூட கோப்பை வென்றுகொடுக்க முடியவில்லை. ஆகையால், 2021-ஆம் ஆண்டில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
2008 முதல் ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான இவர், 16ஆவது சீசனிலும் கோப்பை வெல்லும் முனைப்பில் ஆர்சிபி அணிக்காக தொடர்ந்து அதிரடி காட்டினார். இருப்பினும், மிடில் வரிசையில் படுமோசமான சொதப்பல் காரணமாக, ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதிபெறாமல் வெளியேறியது.