
நேற்று ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் வாய்ப்புக்கான முக்கியப் போட்டியில் லக்னோ மைதானத்தில் லக்னோ அணியை எதிர்த்து விளையாடிய மும்பை அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை அதிர்ச்சிகரமாகத் தழுவியது. முதலில் விளையாடிய லக்னோ அணி ஆரம்பத்தில் மிகவும் தடுமாறி பின்பு மிகச் சிறப்பாக விளையாடி 177 ரன்களை மூன்று விக்கட் இழப்புக்கு எடுத்தது. ஸ்டொய்னிஸ் 47 பந்துகளில் 89 ரன்கள் விளாசி மும்பையை மிரள விட்டார்.
இதையடுது இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிவரை போராடியும் 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்களை மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தது. இந்தப் போட்டியில் கடைசி சில ஓவர்களில் மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்துக்கு மீறிய ரண்களை வாரி வழங்கி விட்டார்கள். மும்பையின் தோல்விக்குப் பந்துவீச்சாளர்களே முக்கியக் காரணம்.
இதுகுறித்து மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் கூறுகையில், “என்னைப் பொருத்தவரையில் எங்களுடைய திட்டங்களில் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் ஒட்டாமல் இருப்பது மிகவும் ஏமாற்றமான விஷயமாகும். மார்க்கஸ் போன்ற வீரர்களுக்கு இந்த ஆடுகளத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருந்தோம். ஆனால் நாங்கள் பந்து வீச விரும்பிய இடங்களில் பந்தை வீசவில்லை.