
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, டாஸ் போடும்போது மைதானத்தில் இருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர். இதனால் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கிரிக்கெட் வர்ணனையாளர் இயன் பிஷப் தடுமாறினார்.
அப்போது பேசிய தோனி, “சென்னையில் திரும்பி விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஐபிஎல் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் நாங்கள் பெரிய அளவில் சென்னையில் போட்டிகளில் விளையாடியது கிடையாது. வெறும் ஐந்து, ஆறு சீசன் தான் இங்கு விளையாடி இருக்கிறோம். சில போட்டிகளில் பார்வையாளர்கள் முழுமையாக இருக்க மாட்டார்கள்.