Advertisement

அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது மகழ்ச்சி - சாம் கரண்!

வாழ்வா? சவா? என்கிற நிலை வந்தால் எல்லாரும் ஒருமாதிரி செயல்படுவார்கள். சிலருக்கு சிறப்பாக அமையும், சிலர் அடிவாங்குவர்கள். இன்று நன்றாக அமைந்தது, அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது மகழ்ச்சி என சாம் கரண் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 06, 2023 • 11:03 AM
IPL 2023: Sam Curran talks up yorker weapon after final-over masterclass in Guwahati thriller!
IPL 2023: Sam Curran talks up yorker weapon after final-over masterclass in Guwahati thriller! (Image Source: Google)
Advertisement

கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில், டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் சஞ்சு சாம்சன். பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் மற்றும் கேப்டன் ஷிக்கர் தவான் இருவரும் ஓபனிங் செய்து வெளுத்து வாங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவர்களில் 91 ரன்கள் சேர்த்தது.

பிரப்சிம்ரன் 60 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸர் 7 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து வந்த கீப்பர் ஜித்தேஷ் சர்மா 27 ரன்கள் அடித்து அவுட்டானார். மறுமுனையில் அபாரமாக விளையாடி இதுவரை நிலைத்து நின்ற ஷிக்கர் தவான் 3 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகள் உட்பட 56 பந்துகளில் 86 ரன்கள் அடித்தார். 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் அடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

Trending


இதையடுத்து, 198 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஷ்வி ஜெய்ஸ்வால்(11), அஸ்வின்(0) மற்றும் ஜோஸ் பட்லர்(19) ஆகிய மூவரும் சொற்பரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் அணியை சரியவிடாமல் 25 பந்துகளில் 42 ரன்கள் அடித்திருந்தபோது பஞ்சாப் பவுலர் நாதன் எல்லிஸ் பந்தில் தவறான நேரத்தில் அவுட்டானார். படிக்கல் 21(26) ரன்கள், ரியான் பராக் 20(12) ரன்கள் ஆட்டமிழந்தனர்.

ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த “இம்பாக்ட் பிளேயர்” துருவ் ஜுரல் மற்றும் ஷிம்ரான் ஹெட்மயர் இருவரும், இன்னும் போட்டியில் உயிர் இருக்கிறது என்பதை கட்டினார். 2ஆவது விக்கெட்டுக்கு 27 பந்துகளில் 62 ரன்கள் குவித்தது இந்த ஜோடி. கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என இருந்தபோது, சாம் கர்ரன் சிறப்பாக கட்டுப்படுத்தி 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பஞ்சாப் அணிக்கு அபாரமாக பந்துவீசிய நாதன் எல்லிஸ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அர்ஷ்தீப் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

போட்டி முடிந்தபின் பேசிய சாம் கரன் கூறுகையில், “இது போன்ற சூழலில் வாழ்வா? சாவா? என்று தான் மோதவேண்டும். இதில் அதிக அளவில் யாரக்கர் பயன்படுத்துவார்கள். ஆனால் சில போட்டிகளில் அது எடுபடும். சில போட்டிகளில் அது ஆபத்தாக முடியலாம். இன்றைய போட்டியில் எனக்கு அது தேவைப்படவில்லை. மேலும் பந்து ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் பிடித்து வீசுவதற்கு கடினமாக இருந்தபோது யார்க்கர் வீசுவது எளிதல்ல. 

பந்து இன்னும் மேலே சென்றுவிட்டால் கூடுதல் ஆபத்தாக முடிந்துவிடும். இந்த நேரத்தில் சரியான லைன் மற்றும் லென்த் இரண்டில் மட்டுமே கவனமாக இருந்தேன். இன்றைய ஆட்டத்தில் பிரப்சிம்ரன் விளையாடிய விதம் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இதுபோன்று அதிக ஸ்கோர் அடிக்கக்கூடிய மைதானத்தில் அதிரடியாக விளையாடி நல்ல துவக்கம் அமைத்துக்கொடுத்தார். தவான் மிகவும் நிதானமாக ஆரம்பித்தபோது, இவர் அடித்து ஆடியது திருப்புமுனை” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement