
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஈடன் கார்டனில் நடைபெற்று வரும் 9ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு வெங்கடேஷ் ஐயர் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களிலும், மந்தீப் சிங் ரன்கள் ஏதுமின்றியும் டேவிட் வில்லியின் அடுத்தடுத்த பந்துகளில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் நிதீஷ் ரானா ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 6 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 57 ரன்களைச் சேர்த்திருந்த குர்பாஸ் கரண் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.