Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2024:அபிஷேக் போரல் அபார ஃபினிஷிங்; பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்கு!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 23, 2024 • 17:19 PM
ஐபிஎல் 2024:அபிஷேக் போரல் அபார ஃபினிஷிங்; பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024:அபிஷேக் போரல் அபார ஃபினிஷிங்; பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்கு! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தி டெல்லி கேப்பிட்டல்ஸை பேட்டிங்கை அழைத்தார். 

இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிட்செல் மார்ஷ் - டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடியதுடன் சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதன்பின் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 20 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் மார்ஷ் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னரும் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 29 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

Trending


அதன்பின் இணைந்த ஷாய் ஹோப் - கேப்டன் ரிஷப் பந்த் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக விளையாட முயன்ற ஷாய் ஹோப் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 33 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட கேப்டன் ரிஷப் பந்த் தனது கம்பேக் ஆட்டத்தில் 18 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

இதனையடுத்து களமிறங்கிய ரிக்கி பூய் 03 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 05 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய அக்ஸர் படேலும் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 21 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதேசமயம் இறுதியில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அபிஷேக் போரல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தத்தளித்துக் கொண்டிருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மீட்டெடுத்தார்.

அதிலும் குறிப்பாக ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 25 ரன்களைச் சேர்த்து மிரட்டினார். இதன்மூலம் அபிஷேக் போரல் 10 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 31 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement