
முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது எப்படி? - மனம் திறந்துள்ள சமீர் ரிஸ்வி! (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடருக்கான ஐபிஎல் மினி ஏலத்தில் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த இளம் அதிரடி வீரர் சமீர் ரிஸ்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஐபிஎல் தொடரில் அறிமுகமில்லாத வீரருக்கு சிஎஸ்கே அணி இவ்வளவு தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்ததன் மூலம் சமீர் ரிஸ்வி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
அதன்படி நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியிலேயே பிளேயிங் லெவனில் இடம்பிடித்த ரிஸ்விக்கு அப்போட்டியில், பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சமீர் ரிஸ்வின் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பேட்டிங் செய்ய களமிறங்கினார். அப்போது ஆட்டத்தின் 19ஆவது ஓவரை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வீசினார்.