Advertisement

கேஎல் ராகுலிடம் விரக்த்தியை வெளிப்படுத்திய லக்னோ அணி உரிமையாளர் - வைரல் காணொளி!

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் விரக்தியை வெளிப்படுத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 09, 2024 • 12:17 PM
கேஎல் ராகுலிடம் விரக்த்தியை வெளிப்படுத்திய லக்னோ அணி உரிமையாளர் - வைரல் காணொளி!
கேஎல் ராகுலிடம் விரக்த்தியை வெளிப்படுத்திய லக்னோ அணி உரிமையாளர் - வைரல் காணொளி! (Image Source: Google)
Advertisement

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஆயூஷ் பதோனி 55 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 48 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 16 பந்துகளிலும், அபிஷேக் சர்மா 19 பந்துகளிலும் தங்கள் அரைசதத்தைப் பதிவுசெய்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 8 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 89 ரன்களையும், அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் என 75 ரன்களையும் சேர்த்து மிரட்டினர்.

Trending


இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9.4 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து மிரட்டியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது 7ஆவது வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி பிளா ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையான விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இது போட்டியின் முடிவுக்கு பின்னர் நேரலையில் ஒளிபரப்பட்டிருந்தது. இதனால் கேஎல் ராகுலின் ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களும் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். 

 

மேலும் ஐபிஎல் தொடரானது ஃபிரான்சைஸ் கிரிக்கெட் தொடர் என்பதால் அணியின் உரிமையாளர்கள் இதுபோன்ற மோசமான தோல்விகளுக்கு தங்களது விரக்த்தி மற்றும் கோபத்தை வெளிப்படுத்துவது சரிதான் என்றாலும், அதனை நேரலையில் செய்தது தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் சஞ்சீவ் கோயங்கா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் உரையாடல் குறித்த காணொளியானது தற்சமயம் வைரலாகியுள்ளது.  


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement