Advertisement

ஐபிஎல் 2024: மார்கஸ் ஸ்டொய்னிஸ் அரைசதம்; குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 07, 2024 • 21:17 PM
ஐபிஎல் 2024: மார்கஸ் ஸ்டொய்னிஸ் அரைசதம்; குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: மார்கஸ் ஸ்டொய்னிஸ் அரைசதம்; குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவிலுள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து குஜராத் டைட்டன்ஸ் அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய ல்க்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் சிக்சர் அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய குயின்டன் டி காக் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கலும் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். பின்னர் கேஎல் ரகுலுடன் இணைந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். 

Trending


பின்னர் இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது. இப்போட்டியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 33 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்ததுடன், அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

இருப்பினும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் தர்ஷன் நல்கண்டே பந்துவீச்சில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசிய ஸ்டொய்னிஸ், மூன்றாவது சிக்சர் அடிக்கும் முயற்சியில் பந்தை கணிக்க தவறியதுடன் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 58 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டையும் இழந்தார். 

பின்னர் இணைந்த நிக்கோலஸ் பூரன் - ஆயூஷ் பதோனி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த ஆயூஷ் பதோனி 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த நிக்கோலஸ் பூரன் 3 சிக்சர்களுடன் 32 ரன்களைச் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். 

இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் தர்ஷன் நல்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி இப்போட்டியை விளையாடவுள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement