
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த தோல்வியின் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 5ஆவது தோல்வியைச் சந்தித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசி மகேந்திர சிங் தோனி, “எங்கள் வழியில் செல்லாத சில போட்டிகள் உள்ளன. எங்களுக்கு சவால் இருந்திருக்கிறது, சவாலை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று நாங்கள் பேட்டிங்கில் போதுமான ரன்களைச் சேர்க்கவில்லை. மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் பந்து வீசியபோது அது பேட்டிங் செய்ய சிறப்பாக இருந்தது. பேட்டிங்கில் நீங்கள் அதிக விக்கெட்டுகளை இழக்கும்போது, அழுத்தம் இருக்கும்.
மேலும் தரமான சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அழுத்ததில் விளையாடுவது கடினம். அதனால் இந்த அட்டத்தில் எங்களுக்கு ஒருபோதும் பார்ட்னர்ஷிப் அமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சூழ்நிலையைப் பார்ப்பது முக்கியம், இரண்டு போட்டிகளில் நாங்கள் நன்றாகச் செயல்பட்டோம், எங்களுடைய பலத்தை மீட்டெடுத்து, நீங்கள் விளையாடக்கூடிய ஷாட்களை விளையாடுகிறோம். அதனால் இது மற்ற அணிகளுடைய பேட்டிங்கிற்கு நிச்சயம் பொருந்தாது.