
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
அதேசமயம் ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து ரசிகர்களை ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலிலும் மும்பை இந்தியன்ஸ் அணி 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியனுக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதன்படி இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பந்துவீச அதிக நேர எடுத்துக்கொண்டதன் காரணமாக அந்த அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக அபராதம் விதிக்கப்பட்ட முதல் அணியின் கேப்டன் எனும் மோசமான சாதனையும் ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.