Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Slow over rate

பந்துவீச அதிக நேரம்; மும்பை அணியின் அனைத்து வீரர்களுக்கும் அபராதம்!
Image Source: Google

பந்துவீச அதிக நேரம்; மும்பை அணியின் அனைத்து வீரர்களுக்கும் அபராதம்!

By Bharathi Kannan May 01, 2024 • 14:46 PM View: 34

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்ப, மும்பை அணி முதல் 6 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் மற்றும் நேஹால் வதேரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

Related Cricket News on Slow over rate