Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான புதிய ஜெர்சியில் களமிறங்கும் ஆர்சிபி!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்சியில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான புதிய ஜெர்சியில் களமிறங்கும் ஆர்சிபி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான புதிய ஜெர்சியில் களமிறங்கும் ஆர்சிபி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 12, 2025 • 07:00 PM

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் லீக் சுற்றின் முடிவில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 12, 2025 • 07:00 PM

இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் 28ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

Trending

இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தாயாராகி வருகின்றனர். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பதிவுசெய்து வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சமீபத்திய போட்டிகளில் சொதப்பியுள்ளதால், இப்போட்டியில் அந்த அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்கவுள்ளது. அதன்படி இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பச்சை நிற ஜெர்சியில் களமிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுசுழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஐபிஎல் தொடரின் ஏதெனும் ஒரு போட்டியில் பச்சை நிற ஜெர்சியை அணிந்து விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. 

அந்தவையில் அந்த அணி நாளைய தினம் இந்த ஜெர்சியை அணிந்து விளையட இருக்கிறது. இதுகுறித்த காணொளியையை ஆர்சிபி அணி தங்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ஜெர்ச்சிகள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்பட்ட துணியால் உருவாக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ரஜத் பட்டிதார் (கேப்டன்), யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ரசிக் தார், சுயாஷ் சர்மா, குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பந்தேஜ், ஜேக்கப் பெத்தேல், தேவ்தத் பாடிக்கல், ஸ்வஸ்திக் சிகாரா, லுங்கி இங்கிடி, அபிநந்தன் சிங், மோஹித் ரதி

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement