Advertisement

ஐபிஎல் 2025: சந்தீப் சர்மாவுக்கான மாற்று வீரராக நந்த்ரே பர்கர் தேர்வு; ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு!

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சந்தீப் சர்மாவுக்கு பதிலாக நந்த்ரே பார்கரை ராஜஸ்தான் ரயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

Advertisement
ஐபிஎல் 2025: சந்தீப் சர்மாவுக்கான மாற்று வீரராக நந்த்ரே பர்கர் தேர்வு; ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு!
ஐபிஎல் 2025: சந்தீப் சர்மாவுக்கான மாற்று வீரராக நந்த்ரே பர்கர் தேர்வு; ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 08, 2025 • 08:46 PM

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் போட்டிகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் ஏதெனும் ஒரு வீரர் காயமடைவதும் தொடர்கதையாகி வருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 08, 2025 • 08:46 PM

அந்தவகையில் தற்சமயாம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலும் ஒரு வீரர் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியின் போது சந்தீப் சர்மா காயத்தை சந்தித்தார்.

இதனையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரின் காயம் குணமடைய சில காலம் தேவை என்று மருத்துவ குழுவினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தற்சமயம் சந்தீப் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகினார். இந்நிலையில் சந்தீப் சர்மாவுக்கான மாற்று வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

அதன்படி தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் நந்த்ரே பர்கரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.3.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய நந்த்ரே பர்கர் 7 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். இருப்பினும் நடப்பு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் அவரை ஏலம் எடுக்க எந்த அணியும் முன்வராத நிலையில், தற்சமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நந்த்ரே பர்கரை ஒப்பந்தம் செய்துள்ளது. 

முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டர் நிதீஷ் ரானா காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இளம் அதிரடி வீரர் லுஹான் ட்ரே பிரிட்டோரியர்ஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னதாக தென் ஆப்பிரிக்காவில் நடந்து முடிந்த எஸ்ஏ20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய பிரிட்டோரியஸ் 12 போட்டிகளில் 397 ரன்களைக் குவித்திருந்தார். 

Also Read: LIVE Cricket Score

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், நந்த்ரே பர்கர்*, ஜோஃப்ரா ஆர்ச்சர், வநிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங், லுஹான் ட்ரே பிரிட்டோரியஸ்*, துஷார் தேஷ்பாண்டே, சுபம் துபே, யுத்வீர் சரக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, வைபவ் சூர்யவன்ஷி, குவேனா மபாகா, குணால் ரத்தோர், அசோக் சர்மா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement