டி20 கிரிக்கெட்டின் வேகம் 300 ரன்கள் எடுக்கக்கூடிய நிலையை எட்டியுள்ளது - ஷுப்மன் கில்!
தற்போதுள்ள டி20 கிரிக்கெட்டில் ஆட்டத்தின் வேகம், ஒரு போட்டியில் 300 ரன்கள் எடுக்க முடியும் என்ற உணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு எட்டியுள்ளது என்று குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதிலும் குறிப்பாக தங்களுடைய முதல் சீசனிலேயே கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி இம்முறை ஷுப்மன் கில் தலைமையில் சாதிக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி மார்ச் 25ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து பலபப்ரீட்சை நடத்தவுள்ளது. இதற்காக அந்த அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Trending
இந்நிலையில், 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மான் கில், ஆட்டத்தின் வேகம், பேட்டிங் செய்யும் அணிக்கு 300 ரன்கள் என்பது சாத்தியம் என்ற நிலையை எட்டியுள்ளதாக கூறுகிறார். இதுகுறித்து பேசிய அவர், “தற்போதுள்ள டி20 கிரிக்கெட்டில் ஆட்டத்தின் வேகம், ஒரு போட்டியில் 300 ரன்கள் எடுக்க முடியும் என்ற உணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு, சில சந்தர்ப்பங்களில் அந்த இலக்கை சில அணிகள் எட்டின. மேற்கொண்டு இம்பாக்ட் பிளேயர் விதி அதற்கான சாத்தியத்தை உருவாக்கியதுடன், ஐபிஎல் தொடரையும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. மேற்கொண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த அம்சங்களில் ஒன்று, ஒவ்வொரு நாளும், ஒரு புதிய வீரர் ஒரு நட்சத்திரமாக வெளிப்படும் வாய்ப்பை கொடுத்துள்ளது. நீங்கள் தொடர்ந்து மதிப்பிடப்படாத திறமையாளர்கள் விதிவிலக்கான செயல்திறனை வெளிப்படுத்துவதைக் காண்கிறீர்கள்.
ஐபிஎல் போன்ற நீண்ட தொடர்களில் சமநிலை மிக முக்கியமான விஷயம். நீங்கள் சரியான மனநிலையுடனும் தர்க்கத்துடனும் விளையாடுகிறீர்கள் என்றால் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் தோற்றது கவலைக்குரிய விஷயமல்ல. அணித் தேர்வு மற்றும் உத்தியில் நிலைத்தன்மை இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் பிளே ஆஃப் சுற்றுகளுக்குத் தகுதி பெற உண்மையான போட்டியாளராக மாறுவீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மன் கில் (கேப்ட்ன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்ஷன், ஷாருக் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ராகுல் திவேத்தியா, ரஷித் கான், நிஷாந்த் சிந்து, மஹிபால் லோம்ரோர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், மானவ் சுதர், வாஷிங்டன் சுந்தர், ஜெரால்ட் கோட்ஸி, முகமது அர்ஷத் கான், குர்னூர் சிங் ப்ரார், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், சாய் கிஷோர், இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ், கிளென் பிலிப்ஸ், கரீம் ஜனத், குல்வந்த்யா கே.
Win Big, Make Your Cricket Tales Now