Advertisement

ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸுக்கு 96 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி!

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 96 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸுக்கு 96 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி!
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸுக்கு 96 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 18, 2025 • 11:06 PM

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 18, 2025 • 11:06 PM

பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தாமதமானது. பின்னர் மழை காரணமாக இப்போட்டியானது 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சால்ட் 4 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விராட் கோலியும் விக்கெட்டை இழந்தார். 

Also Read

பின்னர் களமிறங்கிய கேப்டன் ராஜத் படிதார் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 4 ரன்களுக்கும், ஜித்தேஷ் சர்மா 2 ரன்களுக்கும், குர்னால் பாண்டியா ஒரு ரன்னிலும் என விகெட்டை இழக்க, ரஜத் படிதாரும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய இம்பேக் வீரர் மனோஜ் பன்டேஜ் ஒரு ரன்னிற்கு நடையைக் காட்ட ஆர்சிபி அணி 42 ரன்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Also Read: Funding To Save Test Cricket

மேற்கொண்டு புவனேஷ்வர் குமார் மற்றும் யாஷ் தயாள் ஆகியோரும் ஹர்பிரீத் பிரார் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 26 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 48 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ஆர்சிபி அணி 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் அணி தரப்பில் மார்கோ ஜான்சென், யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்டோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement