Advertisement

நாங்கள் எளிய கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம் - ஹர்திக் பாண்டியா!

ஒரு குழுவாக, நாங்கள் பேட்டிங் செய்த விதம் சரியான பேட்ஸ்மேன்ஷிப்பாக இருந்தது என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

Advertisement
நாங்கள் எளிய கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம் - ஹர்திக் பாண்டியா!
நாங்கள் எளிய கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம் - ஹர்திக் பாண்டியா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 02, 2025 • 12:42 PM

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 02, 2025 • 12:42 PM

இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரியன் ரிக்கெல்டன் 61 ரன்னிலும், ரோஹித் சர்மா 53 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் துணைக்கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலா 48 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.  இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 217 ரன்களைச் சேர்த்தது. 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை தரப்பில் கரண் சர்மா மற்றும் டிரென்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறியுள்ளது. 

இந்த வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங் செய்த விதம் மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல் பந்துவீச்சிலும் சிறப்பாக இருந்தோம். இருப்பினும் நாங்கள் ஒருவேளை 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம். அதனை நாங்கள் தவறவிட்டோம். நானும் சூர்யகுமார் யாதவும் ரன்களைச் சேர்க்கக்கூடிய ஷாட்டுகளை விளையாட வேண்டும் என்பது பற்றி பேசினோம். அதேபோல் ரோஹித் மற்றும் ரியான இருவரும் அவர்களின் பாணியில் ஆட்டத்தை எடுத்துச் சென்றனர். 

இது மிகவும் அருமையாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். இது சூழ்நிலையில் என்ன தேவை என்பதைப் பற்றி வீரர்கள் புரிந்து விளையாடினர். அணி வீரர்கள் மீண்டும் பேட்ஸ்மேன்ஷிப்பிற்குச் செல்கிறார்கள். ஒரு குழுவாக, நாங்கள் பேட்டிங் செய்த விதம் சரியான பேட்ஸ்மேன்ஷிப்பாக இருந்தது. அதேபோல் பந்து வீச்சாளர்களில் யாரைக் குறிப்பிடுவது என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் எல்லோரும் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.

Also Read: LIVE Cricket Score

நாங்கள் எளிய கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம், அதற்காகவே குழுவாக செயல்பட்டும் வருகிறோம். நாங்கள் ஒவ்வொரு ஆட்டாத்திற்கு இதே முறையை பின்பற்ற விரும்புகிறோம். அது தொடரும் என்று நினைக்கிறேன். நாங்கள் பணிவாகவும், மிகவும் ஒழுக்கமாகவும், தொடர்ந்து கவனம் செலுத்தவும் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement