Advertisement

ஐபிஎல் 2021: மேக்ஸ்வெல் விளையாடுவது உறுதி!

அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் கிளென் மேக்ஸ்வெல் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 06, 2021 • 22:10 PM
IPL: Maxwell will join RCB camp in Dubai in 'two or three days', says Hesson
IPL: Maxwell will join RCB camp in Dubai in 'two or three days', says Hesson (Image Source: Google)
Advertisement

கரோனா தொற்று காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. 

இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த வாரமே துயாய் சென்று தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டது. 

Trending


இந்நிலையில் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துள்ள ஆர்சிபி அணி இன்று பயிற்சியில் ஈடுபட்டது. இதற்கிடையில் நடப்பாண்டு சீசனில் அதிரடியாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் இன்னும் ஓரிரு தினங்களில் துபாய் வந்தடைவார் என ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் மைக் ஹொசைன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர்,“ஏபிடி வில்லியர்ஸ் இன்றைய தினம் துபாய் வந்தடைந்தார். அதேபோல் கிளென் மேக்ஸ்வெல் இன்னும் ஓரிரு தினங்களில் இங்கு வந்துவிடுவர். மேலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் எங்கள் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவர்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!

முன்னதாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஆர்சிபி அணியின் ஆடம் ஸாம்பா, கேன் ரிச்சர்ட்சன் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் விலகிய நிலையில், மேக்ஸ்வெல்லும் இத்தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் ரசிகர்களின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் மைக் ஹொசைனின் பதில் அமைந்துள்ளதால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement