
IPL mega auction 2022: marquee players to watch out for (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. இந்த ஏலத்தில் மொத்தம் 600 வீரர்களும், 10 அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இதில் மார்க்கீ வீரர்கள் எனப்படும் முதல் 10 வீரர்களுக்கான ஏலம் தற்போது முடிந்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஏலத்தில் முதல் வீரராக ஷிகர் தவான் இடம்பெற்றார்.
ரூ.2 கோடி ஆரம்ப விலையைக் கொண்ட ஷிகர் தவானை பஞ்சாப் கிங்ஸ் அணி 8.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதன்மூலம் மயங்க் அகர்வாலும் இணைந்து ஷிகர் தவான் தொடக்க வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.