ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியீடுவதற்கு அக்டோபர் 31ஆம் தேதியே கடைசி நாள் என பிசிசிஐ கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்,கேகேஆர் உள்ளிட்ட அணிகள் 6 வீரர்களை தக்கவைத்துள்ள நிலையில், பஞ்சா கிங்ஸ் அணி 2 வீரர்களை மட்டுமே தக்கவைப்பதாக அறிவித்துள்ளது.
இதுதவிர்த்து, இந்த ஏலத்தில் அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியானது 110.5 கோடியுடனும், குறைந்தபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது ரூ.41 கோடியுடனும் பங்கேற்க இருக்கின்றன. மேலும் ஆர்சிபி அணி 83 கோடியுடனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 73 கோடியுடனும், லக்னோ, குஜராத் அணிகள் தலா 69 கோடியுடனும், கேகேஆர் அணியானது 51 கோடியுடனும், மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் தலா 45 கோடியுடனும் இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளது.