
‘IPL won’t be same, end of an era': Twitter heartbroken after Gayle decides against registering for (Image Source: Google)
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காகப் பதிவு செய்துள்ள வீரர்களின் பட்டியலை 10 அணிகளுக்கும் அனுப்பியுள்ளது பிசிசிஐ. அந்தப் பட்டியலில் கிறிஸ் கெயிலின் பெயர் இடம்பெறவில்லை.
ஐபிஎல் 2021 தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில், கடந்ட்தாண்டு 10 ஆட்டங்களில் விளையாடி 193 ரன்கள் எடுத்தார். திடீரென ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலக முடிவெடுத்து கரோனா தடுப்பு வளையத்தை விட்டு வெளியேறினார் கெயில்.
டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு உதவுவதில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் துபாயில் நான் இடைவேளை எடுத்துக்கொள்கிறேன். எனக்கு ஓய்வளிக்க சம்மதம் தெரிவித்த பஞ்சாப் அணிக்கு நன்றி என்று கூறினார்.