Advertisement

ENG vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்

இந்திய அணியின் பிளேயிங் லெவனைத் தேர்வுந்தெடுத்துள்ள இர்ஃபான் பதான், தனது அணியில் கருண் நாயர் மற்றும் நிதீஷ் ரெட்டி ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

Advertisement
ENG vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்
ENG vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான் (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 19, 2025 • 03:44 PM

Irfan Pathan's India's Playing XI England 1st Test: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதன் தேர்வு செய்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 19, 2025 • 03:44 PM

ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன. இதில் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த கணிப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் தனது பிளேயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார்.

அதன்படி அவர் தேர்வு செய்த இந்த அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்துள்ள நிலையில், மூன்றாம் இடத்தில் கருண் நாயருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசியா அவர் “இந்திய அணியின் முன்றாம் வரிசையில் சாய் சதுர்ஷன் அல்லது கருண் நாயர் பற்றி நிறைய பேச்சு உள்ளது? என்னைப் பொறுத்தவரை, கருண் நாயரை விளையாட வைப்பது நல்லது.

ஏனென்றால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார், மேலும் முதல் தரத்தில் அவரது ஃபார்ம் மிகவும் சிறப்பாக இருந்துள்ளது. சாய் சுதர்ஷனின் தற்போதைய ஃபார்ம் சிறப்பாக உள்ளது, ஆனால் அது வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தான். கருண் நாயர் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுகிறார், மேலும் அவரது சராசரியும் அற்புதமாக உள்ளது என்று கூறியுள்ளார். மேற்கொண்டு அவர் ஷுப்மன் கில், ரிஷப் பந்த அகியோரை 4,5 இடங்களில் வாய்ப்பு கொடுத்துள்ளார். 

அதேசமயம் அணியின் ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஷர்தூல் தாக்கூர் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார். அவர்களுடன் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா அகியோரை அணியில் சேர்த்துள்ளார். இர்ஃபான் பதானின் இந்த கணிப்பு படி இந்தியா அணி கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். 

Also Read: LIVE Cricket Score

இர்ஃபான் பதான தேர்வு செய்த இந்திய அணியின் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement