
Irfan Pathan's India's Playing XI England 1st Test: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதன் தேர்வு செய்துள்ளார்.
ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன. இதில் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த கணிப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் தனது பிளேயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார்.
அதன்படி அவர் தேர்வு செய்த இந்த அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்துள்ள நிலையில், மூன்றாம் இடத்தில் கருண் நாயருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசியா அவர் “இந்திய அணியின் முன்றாம் வரிசையில் சாய் சதுர்ஷன் அல்லது கருண் நாயர் பற்றி நிறைய பேச்சு உள்ளது? என்னைப் பொறுத்தவரை, கருண் நாயரை விளையாட வைப்பது நல்லது.