Advertisement

ஓவல் டெஸ்ட் - இந்திய அணி பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!

கெனிங்ஸ்டன் ஓவலில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார்.

Advertisement
ஓவல் டெஸ்ட் - இந்திய அணி பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
ஓவல் டெஸ்ட் - இந்திய அணி பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 30, 2025 • 03:08 PM

IND vs ENG, 5th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்துள்ள இர்ஃபான் பதான், அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 30, 2025 • 03:08 PM

இந்தியா -  இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் போட்டி என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்ததெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற சந்தேகங்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் ஆகியோரையும், மூன்றாம் வரிசையில் சாய் சுதர்ஷனையும், நான்காம் வரிசையில் கேப்டன் ஷுப்மன் கில்லையும் தேர்ந்தெடுத்துள்ளார். மேற்கொண்டு காயம் காரணமாக விலகிய ரிஷப் பந்திற்கு பதிலாக துருவ் ஜூரலை அணியில் சேர்த்துள்ளார். 

 மேலும் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆல் ரவுண்டர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்கவைத்திருக்கும் அவர், ஷர்தூல் தாக்கூருக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளார். மேற்கொண்டு கடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கும் இர்ஃபான் பதான் தனது அணியில் வாய்ப்பு வழங்கிய நிலையில் அன்ஷூல் கம்போஜை அணியில் இருந்து நீக்கியுள்ளார். 

மேற்கொண்டு அவர் வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜை தேர்வு செய்துள்ள நிலையில் அறிமுக வீரர் ஆர்ஷ்தீப் சிங் அல்லது பிரஷித் கிருஷ்ணா லெவனில் இடம்பிடிக்கலாம் என்பதையும் கூறியுள்ளார். அதேசமயம் இப்போட்டியில் பணிச்சுமைக் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்பதனாலேயே அவர் அர்ஷ்தீப் சிங் அல்லது பிரஷித் கிருஷ்ணாவை அணியில் சேர்த்திருப்பதாகவும் தெளிப்படுத்தியுள்ளார். 

இர்ஃபான் பதான் தேர்வு செய்த இந்திய அணி பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், சுப்மான் கில் (கேப்டன்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்/பிரசித் கிருஷ்ணா.

Also Read: LIVE Cricket Score

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
வீடு Special Live Cricket Video Sports