
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோத இருக்கின்ற மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதல் இரண்டு போட்டிகளில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் கேஎல் ராகுல் இந்திய அணியை வழிநடத்துகிறார்.
மேலும் முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்த இருக்கும் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் திலக் வர்மாவிற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்திய அணியின் மூத்த ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இளம் ஆன்றவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்
ஆனால் சமீப காலமாக இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இடம் பெறவில்லை. உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த சஞ்சு சாம்சன் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் கேஎல் ராகுலுக்கு மாற்றுவீராக இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். ராகுல் அணிக்கு திரும்பியதும் சஞ்சு சாம்சன் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.