Advertisement

ஷமி, பும்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் கிடைக்க மாட்டார்கள் - இர்ஃபான் பதான்!

இந்த ஆண்டில் அணியில் உள்ள வேகப் பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 02, 2024 • 20:42 PM
ஷமி, பும்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் கிடைக்க மாட்டார்கள் - இர்ஃபான் பதான்!
ஷமி, பும்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் கிடைக்க மாட்டார்கள் - இர்ஃபான் பதான்! (Image Source: Google)
Advertisement

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32  ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி அணியில் இடம்பெறாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. 

ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்துவீசினாலும், அவருக்கு உறுதுணையாக கூட்டணி அமைத்து மற்ற வேகப் பந்துவீச்சாளர்கள் பந்துவீசி எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கத் தவறினர்.  இந்த நிலையில், இந்த ஆண்டில் அணியில் உள்ள வேகப் பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டுமென  இஃர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

Trending


இதுகுறித்து பேசிய அவர், “இந்த ஆண்டில் சிறப்பான வேகப் பந்துவீச்சாளர்கள் அடங்கிய அணியை இந்தியா உருவாக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவில் என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறவில்லை. பும்ரா அணியில் இருக்கிறார். ஆனால், அவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் என்ன ஆகும். 

கடந்த காலங்களில் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதை நாம் பார்த்திருக்கிறோம். அதனால், அவருக்கு காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வேகப் பந்துவீச்சாளர்கள் அதிகம் அடங்கிய ஒரு குழுவை உருவாக்காவிட்டால் நமக்கு முகமது ஷமி, பும்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் கிடைக்க மாட்டார்கள். தரமான 7-8 வேகப் பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement