
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. 3வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தனது 30வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். கடைசியாக 2020 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் சதம் அடித்தார். கிட்டத்தட்ட 1100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சதம் அடித்திருக்கிறார்.
இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டபோது ரோஹித் சர்மாவிடம், “மூன்று வருடங்களுக்கு பிறகு சதம் அடித்திருக்கிறீர்கள். இந்த கம்பேக் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?.” என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
முதலில் பும்ராவின் உடல்நிலை குறித்து பேசினார். பின்னர் 3 வருடம் சதம் அடிக்காதது பற்றி நிருபர் எழுப்பிய கேள்விக்கு பதில் கொடுத்தார். “மூன்று வருடமாக நான் சதம் அடிக்கவில்லை என கூறியதற்கு வருகிறேன். இதற்கு நடுவில் வெறும் 12 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறேன். ஆகையால் இது ஒன்றும் பெரிய இடைவெளி இல்லை.” என்றார்.