
இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பிரபலமாக இருக்கும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் புவியியல் அமைப்பு அடிப்படையில் கிழக்கு, மேற்கு, வடக்கு, மத்திய என ஆறு அணிகளுக்கு இடையே நடத்தப்படுகிறது. இத்தொடர் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் ஃபோட்டி பார்மட்டில் நடத்தப்பட்டு வருகிறது. முன்னணி இந்திய வீரர்கள் பலர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இல்லாத சமயங்களில் துலீப் கோப்பை, ரஞ்சிக் கோப்பை போன்ற கடும்போட்டி நிறைந்த உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பது வழக்கம்.
இந்த வருட தெற்கு ஜோன் அணியில் ஐபிஎல் போட்டிகளில் அசத்திய திலக் வர்மா, சாய் கிஷோர், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்கள் கொண்ட பட்டாளம் இருக்கிறது. அதேபோல் கிழக்கு ஜோன் அணியில் சில இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியை இந்தியா ஏ அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் வழி நடத்துகிறார். சபாஷ் நதீம் துணைகேப்டனாக இருக்கிறார். இந்த கிழக்கு ஜோன் அணிக்காக தான் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். ஆனால் பிளேயிங் லெவனில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அடுத்ததாக வருகிற ஜூலை மாதம் இரண்டாம் வாரம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.