
இந்திய அணி தற்போதைய தனது தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் மூன்று கேப்டன்களின் தலைமையில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முடித்துக் கொண்டு, கேஎல் ராகுல் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தற்பொழுது விளையாடி வருகிறது.
இதையடுத்து இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. மேலும் விராட் கோலி, கே.எல். ராகுல் ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ், ஷுப்மன் கில் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். வழக்கம்போல் பந்துவீச்சில் பும்ரா, சமி சிராஜ் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலில் காயம் காரணமாக முகமது ஷமி தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இவருடைய இடத்திற்கு மாற்று வீரர் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.