
இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகளை கொண்ட தொடரில் முதலில் விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி நாளை டர்பன் நகரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐசிசி வீரர்களின் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் இளம் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இவர் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கானை பின்னுக்கு தள்ளி 699 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறார்.
இங்கிலாந்து அணியின் ஆதில் ரசீது மற்றும் இலங்கை அணியின் வணிந்து ஹசரங்கா ஆகியோர் 679 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர். ஐந்தாவது இடத்தில் இலங்கை அணியின் மற்றொரு சுழற் புதிச்சாளரான மகேஷ் தீக்ஷனா 677 புள்ளிகளுடன் இருக்கிறார். ஐசிசி யின் முதல் ஐந்து ரேங்கில் இருக்கும் வீரர்களும் சுழற் பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.