Advertisement

சூர்யகுமார் விளையாட வேண்டும் என்ற முடிவு மிகப்பெரிய சூதாட்டமாக இருக்கும் - கௌதம் கம்பீர்!

சூர்யகுமார் யாதவை அணியில் சேர்ப்பது எப்படி என்றாலும் ஒரு சூதாட்டம் போலத்தான் அமையும் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Advertisement
சூர்யகுமார் விளையாட வேண்டும் என்ற முடிவு மிகப்பெரிய சூதாட்டமாக இருக்கும் - கௌதம் கம்பீர்!
சூர்யகுமார் விளையாட வேண்டும் என்ற முடிவு மிகப்பெரிய சூதாட்டமாக இருக்கும் - கௌதம் கம்பீர்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 24, 2023 • 01:26 PM

இந்திய அணிக்கு சொந்த நாட்டில் நடக்கும் உலகக் கோப்பைக்கு முன்பாக, ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஆசியக் கோப்பை மற்றும் இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் என இரண்டு தொடர்கள் இருந்தது. ஆசியக் கோப்பைக்குச் செல்வதற்கு முன்னால் இந்திய அணி குறித்து எந்த பக்கமும் பெரிய நம்பிக்கையான பேச்சுகளைப் பார்க்க முடியவில்லை. இந்திய அணியை உலகக் கோப்பை அரையிறுதி அணியாக தேர்ந்தெடுப்பவர்கள் கூட, இந்திய அணியின் குறை என்று எதையாவது சுட்டிக் காட்டவே செய்தார்கள்.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 24, 2023 • 01:26 PM

இந்த நிலையில்தான் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் இஷான் கிஷன் இருவரும் சிறப்பான பேட்டிங் மூலம் வெளியே வந்தார்கள். மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல் என ஒரு படையே வெளியே வந்தது. இதில் மிக முக்கியமாக பந்துவீச்சில் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சிராஜ், குல்தீப் என நல்ல ரிதத்தில் இருப்பதை காட்டினார்கள்.

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டது. இந்திய அணி மீதான எல்லா அவநம்பிக்கைகளையும் துடைத்து விட்டது. இதையெல்லாம் தாண்டி இந்திய அணியில் ஸ்ரேயாஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் தங்களை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருந்தார்கள். அதே சமயத்தில் இவர்கள் இருவரும் விளையாடும் அணியில் இடம்பெறும் வாய்ப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சூர்யக்குமார் யாதவும் அரைசதம் அடித்து திரும்ப வந்திருக்கிறார். தற்பொழுது உலக கோப்பையில் யாருக்கு வாய்ப்பு தரலாம் என்பது குறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர் சூரியகுமார் பற்றி பேசும்பொழுது, அவரை அணியில் சேர்ப்பது எப்படி என்றாலும் ஒரு சூதாட்டம் போலத்தான் அமையும் என்று கூறினார்.

இதுகுறித்து பேசிய அவர்,  “உலகக் கோப்பைக்கு நீங்கள் செல்லும் போது பொதுவான ஒரு பிளேயிங் லெவனை கொண்டு இருப்பிர்கள். நீங்கள் அந்த அணியில் பெரிய மாற்றங்களை செய்ய மாட்டீர்கள். 2011 உலகக் கோப்பையை நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் எந்த மாற்றமும் செய்யவில்லை. முதல் ஐந்தாறு போட்டிகளில் யூசுப் பதான் விளையாடினார். பிறகு சுரேஷ் ரெய்னா விளையாடினார்.

உங்களுடைய அணியில் சூர்யகுமார் இருந்தால் அவர் ஆறு இல்லை ஏழாம் இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும். ஆனால் ஐந்தாவது இடத்தில் யார் பேட்டிங் செய்வார்கள்? என்பது பெரிய கேள்விக்குறி. ஜடேஜா அந்த இடத்தில் பேட்டிங் செய்யலாம். ஆறாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா ஏழாவது இடத்தில் சூர்யகுமார். ஆனால் 7ஆவது இடத்தில் சூர்யகுமார் விளையாட வேண்டும் என்ற முடிவு மிகப்பெரிய சூதாட்டமாக இருக்கும். ஏனெனில் இது டாப் 4 பேட்ஸ்மேன்களிடம் அதிக அழுத்தத்தையும் ஏற்படுத்தும்” என எச்சரிய்த்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
வீடு Special Live Cricket Video Sports