
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோத இருக்கிறது. ஏற்கனவே இறுதிப் போட்டிக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் தகுதிப் பெற்றுள்ள நிலையில், இந்தப் போட்டியில் மும்பை வென்றால் இரண்டு அணிகளும் இறுதிப்போட்டியில் மீண்டும் ஒருமுறை பலப்பரிட்சை நடத்தும் என்பது ரசிகர்களை எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இதற்கு முன்பான பேட்டியில் இஷான் கிஷான் நிறைய விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். தனது அணி கேப்டன் ரோஹித் சர்மா பற்றியும், சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பற்றி பேசி இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “எல்லா சூழ்நிலையிலும் மகி பாயின் அமைதி அற்புதமானது. அவரது அமைதி மற்றும் குளிர்ச்சியை நான் விரும்புகிறேன். அவர் எதையும் யோசித்துப் பிறகு முடிவெடுப்பார். தனது வீரர்களையும் பந்துவீச்சாளர்களையும் எப்படி பயன்படுத்துவது? என்று அவருக்குத் தெரியும். மேலும் அவருக்கு ஆட்டம் பற்றி எல்லாம் தெரியும்.