Advertisement

ரவீந்திர ஜடேஜாவை பாராட்டிய ரவி சாஸ்திரி!

ஏனென்றால் வெளிநாட்டு மண்ணில் ஒருவரை தான் நாம் சுழற் பந்துவீச்சாளராக விளையாட வைக்க முடியும். அப்போது அஸ்வினுக்கும் ஜடேஜாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்படும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 01, 2023 • 13:13 PM
'Jadeja Gives Nightmares To Opposition Batters': Shastri Rates Current Crop Of Spinners Among India'
'Jadeja Gives Nightmares To Opposition Batters': Shastri Rates Current Crop Of Spinners Among India' (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல் ரவுண்டராக விளங்கும் ஜடேஜா தற்போது ஆல்ரவுண்டர்கள் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இதேபோன்று பேட்டிங் பந்து வீச்சிலும் ஜடேஜா முன்னேறி வருகிறார். ஜடேஜா ரஞ்சிக் கோப்பையில் விளையாடி இரண்டு முறை முச்சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

எனினும் முன்பு அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் தற்போது இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக ஜடேஜா விளங்கி வருகிறார். இந்த நிலையில் ஜடேஜா குறித்து ரவி சாஸ்திரி பேசியது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Trending


அதில், “ஜடேஜா எப்போதுமே விளையாட வேண்டும் என்ற பசியுடன் இருப்பார். அவருடைய உடல் தகுதி முதன்மையானதாக இருக்கும். கிரிக்கெட் மீது தீராத வெறி அவரிடம் உள்ளது. ஜடேஜாவிடம் நாங்கள் பெரிய அளவில் பேச தேவை இருக்காது. 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் போது லார்ட்ஸ் மைதானத்தில் ஜடேஜாவிடும் நான் சில அறிவுரைகளை வழங்கினேன்.

ஜடேஜா அந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் அவரிடம் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. பரத் அருனும் நானும் ஜடேஜாவுக்கு சில அறிவுரைகளை வழங்கினோம். உனக்கு கிரிக்கெட் வீரராக ஜொலிக்க வேண்டிய அனைத்து திறமைகளும் உன்னிடம் இருக்கிறது. உன்னுடைய பேட்டிங்கில் கொஞ்சம் மட்டும் கவனம் செலுத்து. உனக்கு எங்கு குறை இருக்கிறதோ அங்கு கவனம் செலுத்தி பயிற்சி செய். உனக்குத் திறமை இருக்கிறது என்று உன்னிடம் சொல்வதற்கே எங்களுக்கு வினோதமாக இருக்கிறது.

ஏனென்றால் நீ தான் உன்னிடம் உள்ள திறமைகளை கண்டு கொண்டு உன் மீது நீயே நம்பிக்கை வைத்து நான் திறமைசாலி தான் என்று விளையாட வேண்டும் என்று அவரிடம் அறிவுரை கூறியதாக ரவி சாஸ்திரி தெரிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட தொடர்ந்து ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைத்த பிறகு அவர் தொடர்ந்து அணியில் நீடித்து வருகிறார். இந்திய அணி எப்போதெல்லாம் தடுமாறுகிறதோ அப்போதெல்லாம் பேட்டிங் மூலம் அணியை காப்பாற்றி இருக்கிறார். அதுவும் பேட்டிங்கிற்கு கடினமான சூழலில் விளையாடி ரன் சேர்த்திருக்கிறார். பந்து வீச்சிலும் அவர் ஜொலித்திருக்கிறார்.

நாங்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்லும் போது எந்த சுழற் பம்துவீச்சாளரை அணியில் தேர்வு செய்வது என்பதில் கடும் குழப்பம் ஏற்படும். ஏனென்றால் வெளிநாட்டு மண்ணில் ஒருவரை தான் நாம் சுழற் பந்துவீச்சாளராக விளையாட வைக்க முடியும். அப்போது அஸ்வினுக்கும் ஜடேஜாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்படும். நாங்கள் யாரை தேர்வு செய்வது என்பதே தெரியாது” என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

தற்போது 34 வயதான ஜடேஜா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,619 ரன்களையும் பந்து வீச்சில் 259 விக்கெட்டுகளையும் வீழ்த்திருக்கிறார். தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஜடேஜா ஒரு நாள் கிரிக்கெட்டிலும் இடம் பிடித்திருக்கிறார். இதேபோன்று ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு பாதியில் விலகிய ஜடேஜா இம்முறை சாதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement