
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தது. ஏனெனில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியானது, நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறமால் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இதையடுத்து பாகிஸ்தான் அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. அந்தவகையில் கேப்டன், அணியின் பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் ஆகியோரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இதனால் பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் கேரி கிறிஸ்டன் தேர்வுசெய்யப்பட்டார். அதேசமயம், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பியும் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி குரூப் சுற்றுடன் வெளியேறியது. அதன் பின் பாகிஸ்தான் அணியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றன. ஆனால், இதில் கேரி கிர்ஸ்டன் பங்கு பெரிதாக இல்லை. மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போதே பாகிஸ்தான் அணியில் உள்ள வீரர்கள் இரு குழுக்களாக பிரிந்துள்ளனர் என்பதையும் அவர் உறுதிசெய்திருந்தார்.