
சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால் ஐபிஎல் போட்டிகளில் பங்குபெற முடியாது என்றுக்கூறி, இந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளார் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். அவருக்கு பதிலாக மாற்றுவீரரை அறிவித்திருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம்.
இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த வருடம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பகுதியில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக விலகியுள்ளார். சர்வதேச போட்டிகள் இருப்பதால் இந்த வருட ஐபிஎல்லில் பங்கேற்க முடியாது என்று ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் விலகிவிட்டார்.
முன்னணி வீரர்கள் அணியில் இல்லாததால் கொல்கத்தா அணி சற்று திணறி வருகிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் டக்வோர்த் லூயிஸ் முறைப்படி தோல்வியை தழுவியது.