
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரது சதங்கள் காரணமாக முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைச் சேர்த்து அல் அவுட்டானது.
இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அரைசதங்கள் காரணமாக 260 ரன்களைச் செர்த்து ஆல் அவுட்டானது. இதில் கேஎல் ராகுல் 84 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 77 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் 185 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் உஸ்மன் கவாஜா 4 ரன்னிலும், மார்னஸ் லபுஷாக்னே ஒரு ரன்னிலும் என ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, அவர்களைத் தொடர்ந்து நாதன் மெக்ஸ்வீனி 8 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 2 ரன்னிலும் என ஆகஷ் தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 28 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.