Advertisement
Advertisement
Advertisement

ஆசிய கோப்பை 2023: இந்திய அணியின் துணைக்கேப்டன் ஆகிறார் ஜஸ்ப்ரித் பும்ரா?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியின் துணைக்கேப்டன் ஆகிறார் ஜஸ்ப்ரித் பும்ரா?
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியின் துணைக்கேப்டன் ஆகிறார் ஜஸ்ப்ரித் பும்ரா? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 20, 2023 • 02:19 PM

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்பு நடைபெறும் மிகவும் முக்கியம் வாய்ந்த ஆசியக்கோப்பை தொடருக்கு இந்திய அணி நாளை அறிவிக்கப்படலாம் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணி அறிவிப்பில் துணை கேப்டன் பற்றிய அறிவிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 20, 2023 • 02:19 PM

ஹர்திக் பாண்டியா துணை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு புதிய வீரர் ஒருவர் கொண்டுவரப்படலாம் என்கின்ற தகவல்கள் பிசிசிஐ தரப்பில் இருந்து வெளி வந்திருக்கின்றன. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு மூன்று என இழந்தது. தொடரை இழந்ததற்கு முக்கிய காரணமாக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி பார்க்கப்பட்டது. அவர் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம் மோசமாகவே இருந்தது.

Trending

இரண்டாவது போட்டியில் வெல்வதற்கு வாய்ப்பு இருந்தும் அவர் வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி தோற்றார். மேலும் தொடர் முழுவதுமே அவருக்கு இந்தப் பிரச்சனைகள் இருந்தது. தற்பொழுது ஆசியக்கோப்பைக்கு ஓய்வு தரும் பொருட்டு, அயர்லாந்து சென்றுள்ள இந்தியா டி20 அணிக்கு முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, காயத்திலிருந்து திரும்ப வந்த ஜஸ்ப்ரீத் பும்ரா கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

அதே சமயத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான டி20 அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்த ருதுராஜுக்கு அயர்லாந்து தொடரில் கேப்டனாக வாய்ப்பு தரப்படவில்லை. இது அப்போதே நிறைய கேள்விகளை எழுப்பி இருந்தது. தற்போது இதற்கான விடை தெரிய வந்திருக்கிறது.

பிசிசிஐ தரப்பில் கூறும் பொழுது, "ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பைக்கு ஜஸ்ட்ப்ரீத் பும்ரா ரோகித் சர்மாவுக்கு துணை கேப்டனாக கொண்டுவரப்பட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே கிடையாது. அயர்லாந்து சென்றுள்ள இந்திய டி20 அணிக்கு ருத்ராஜுக்கு பதிலாக பும்ரா கேப்டனாக அறிவிக்கப்பட்டதற்கு பின்னால் காரணங்கள் இருக்கிறது" என்று தெரிவிக்கிறது.

மிக முக்கியமாக இந்திய டெஸ்ட் அணிக்கு பும்ராவை கேப்டனாக அறிவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பத்தில் சென்றது. கடந்த வருடம் இங்கிலாந்தில் விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டிக்கு பும்ரா கேப்டனாகவும் இருந்தார். ஹர்திக் பாண்டியா கேப்டன்சி ஆஷிஸ் நெக்ரா இல்லாமல் திருப்தி அளிக்கும் விதமாக இல்லாததால், இயல்பாகவே களத்தில் கேப்டனுக்கு துணையாகச் செயல்பட்டு வரும் பும்ராவுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement