
Jasprit Bumrah set to play the 2nd T20I against Australia in Nagpur (Image Source: Google)
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாக்பூரில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் நாக்பூர் வந்தடைந்தனர்.
முதல் டி20 போட்டியை இந்தியா இழந்ததால் வெற்றி பெற வேண்டிய முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை , இதில் வென்றால் தொடரை கைப்பற்றிவிடும்.
இந்திய அணியில் பேட்டிங் பெரிய சிக்கலை ஏற்படுத்தவில்லை. ரோஹித் 11, விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்தும், இந்தியா 208 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. ஆனால் பந்துவீச்சு தான் படு மோசமாக உள்ளது. அணியில் இடம்பெற்ற உமேஷ் யாதவ், ஹர்சல் பட்டேல், புவனேஸ்வர் குமார் என 3 வீரர்களுமே ரன்களை வாரி வழங்கினர்.