
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக கடந்த ஆண்டு பல்வேறு தொடரில் பங்கேற்காமல் இருந்தார். மேலும் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பு அந்தத் தொடரில் இருந்து விலகினார். அதன் பிறகு பெங்களூருவில் முகாமிட்டு பயிற்சியை பும்ரா தொடங்கினார்.
ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை தொடரில் பும்ரா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போதும் பும்ராவுக்கு முதுகு பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் அந்தத் தொடரில் இருந்தும் கடைசி நிமிடத்தில் விலகினார். பும்ராவை சரியாக கையாளாமல் முந்தைய தேர்வு குழு அவசரம் காட்டியதாக புகார் எழுந்தது.
இதன் காரணமாக பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் பும்ரா பங்கேற்க முடியாமல் போய்விட்டது என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் பும்ரா மீது ரசிகர்கள் கடும் விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். அதாவது இந்திய அணிக்காக விளையாடும் போது பும்ரா காயம் என்று சொல்லி அமர்ந்து விடுவதாகவும், மும்பை அணிக்காக மட்டும் விளையாடுவதாகவும் ரசிகர்கள் புகார் தெரிவித்தனர்.