Advertisement

இந்திய அணிக்கெதிரான திட்டம் தங்களிடம் உள்ளது - ஜொனதன் டிராட்!

கடந்த 2 போட்டிகளில் செய்த தவறுகளில் பாடத்தை கற்றுக் கொண்டு ஆஃப்கானிஸ்தான் வெற்றிக்கு போராடும் என்று பயிற்சியாளர் ஜொனதன்  டிராட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 16, 2024 • 21:09 PM
இந்திய அணிக்கெதிரான திட்டம் தங்களிடம் உள்ளது - ஜொனதன் டிராட்!
இந்திய அணிக்கெதிரான திட்டம் தங்களிடம் உள்ளது - ஜொனதன் டிராட்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெறும் இந்த தொடரில் நட்சத்திர வீரர் ரசித் கான் காயத்தால் வெளியேறியது ஆஃப்கானிஸ்தானுக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் எஞ்சிய வீரர்களுடன் முதல் 2 போட்டிகளில் விளையாடிய அந்த அணி முடிந்தளவுக்கு போராடியும் தோல்வியை சந்தித்தது.

குறிப்பாக 2ஆவது போட்டியில் 172 ரன்கள் குவித்த ஆஃப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. இருப்பினும் சிவம் துபே, ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடி அந்த இலக்கை மிகவும் எளிதாக சேசிங் செய்தனர். அந்த வகையில் தரவரிசையில் 10ஆவது இடத்தில் இருக்கும் ஆஃப்கானிஸ்தானின் ஆட்டம் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்றே சொல்லலாம்.

Trending


இதை தொடர்ந்து நாளை பெங்களூருவில் நடைபெறும் கடைசி போட்டியில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. அதில் கடந்த 2 போட்டிகளில் செய்த தவறுகளில் பாடத்தை கற்றுக் கொண்டு ஆஃப்கானிஸ்தான் வெற்றிக்கு போராடும் என்று பயிற்சியாளர் ஜொனதன்  டிராட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக 7 – 16 வரையிலான மிடில் ஓவர்களில் இந்திய பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் அளவுக்கு பந்து வீசும் திட்டம் தங்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஃப்கானிஸ்தான் அணி பயிற்சியாளர் ஜொனதன் டிராட், “மூன்றாவது டி20 போட்டியில் 40 ஓவர் வரை போட்டி நடக்கும் என நினைக்கிறேன். எங்களுடைய அணி வீரர்கள் இந்திய அணியின் பேட்டிங்கை நடு வரிசையில் கொஞ்சம் நெருக்கடி கொடுத்து விளையாட வைக்க வேண்டும். அப்படி நெருக்கடி கொடுத்தால் நிச்சயம் நன்றாக இருக்கும். 

ரஷித் கான் எப்போது அணிக்கு திரும்புவார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் மீது எந்த நெருக்கடியும் இல்லை. அவர் விரைவில் விளையாட வேண்டும் என்று நாங்களும் கடந்த இரண்டு டி20 போட்டியில் நாங்கள் செய்ய தவறி விஷயத்தை மூன்றாவது போட்டியில் செய்வோம் என்று நம்புகிறேன்.  எங்களிடம் கடைசி பத்து ஓவரில் நன்றாக அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். 

இந்தியா பேட்டிங் செய்யும்போது கடைசி ஐந்து ஓவரில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது எவ்வாறு கடினமாக இருக்கிறது என்பதை நாம் பார்த்தோம். பெங்களூர் ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்கும். எனவே செய்த தவறில் இருந்து பாடம் கற்று இந்தியாவுக்கு கொஞ்சம் நெருக்கடி ஏற்படுத்தினால் வெற்றி கிட்டும்” என்று கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement