
உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இங்கிலாந்து அணி, தொடர் தோல்வியால் முதல் அணியாக உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் தட்டு தடுமாறி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறும். இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய ஜாஸ் பட்லர் இனிவரும் காலத்தில் இங்கிலாந்து ஒரு நாள் அணியை கட்டமைக்கும் பொறுப்பை நான் எடுத்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “எங்களுடைய புதிய அணியில் பல திறமை வாய்ந்த இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அந்த வீரர்கள் எல்லாம் தங்களுடைய வாய்ப்பு நோக்கி காத்திருக்கிறார்கள். எங்கள் அணியில் இருக்கும் சில வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அவ்வளவாக விளையாடுவதில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் அனுபவம் நிச்சயம் இருக்கிறது. இதனால் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு புதிதல்ல.எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்துவீச்சாளர்கள் ஆக்ரோஷமாக பந்து வீச வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன்.