சாம்பியன்ஸ் கோப்பை 2025: புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ஜோஸ் பட்லர்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியின் மூலம் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் தங்களுடைய முதல் போட்டியில் தோல்வியை தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. மேலும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும்ம் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Trending
இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏனெனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் முதல் போட்டியில், பட்லர் 21 பந்துகள், ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 23 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்திருந்தார். இந்நிலையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலம் அவர் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
தோனியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு
இப்போட்டியில் ஜோஸ் பட்லர் 4 சிக்ஸர்கள் அடித்தால், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை முந்தி ஆறாவது இடத்தைப் பிடிப்பார். இதுவரை ஜோஸ் பட்லர் மூன்று வடிவங்களிலும் சேர்த்து 376 போட்டிகளில் 381 இன்னிங்ஸ்களில் 356 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதேசமயம் மகேந்திர சிங் தோனி 538 போட்டிகளில் 526 இன்னிங்ஸ்களில் 359 சிக்ஸர்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜானி பேர்ஸ்டோவ்வை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு
இப்போட்டியில் ஜோஸ் பட்லர் 3 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் எடுத்த 7ஆவது வீரர் எனும் பெருமையை பெறுவார். தற்போது இந்த பட்டியலில் ஜானி பேர்ஸ்டோவ் 348 இன்னிங்ஸ்களில் 11581 ரன்களை எடுத்து ஏழாவது இடத்தில் உள்ளார். அதேசமயம் ஜோஸ் பட்லர் 381 இன்னிங்ஸில் 11,579 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக அந்த அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி காயம் காரணமாக பிரைடன் கார்ஸ் தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அஹ்மத் இங்கிலாந்து ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், டாம் பான்டன், ஹாரி புரூக், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷீத், ஜோ ரூட், சாகிப் மஹ்மூத், பில் சால்ட், மார்க் வுட், ரெஹான் அகமது
Win Big, Make Your Cricket Tales Now